சினிமா
“குஷ்பு இல்லைனா.. இந்த நடிகையிடம் காதலை சொல்லி இருப்பேன்” – சுந்தர் சி
காமெடி திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குநர் என்றால், அது சுந்தர் சி தான். பல்வேறு காமெடி கதாபாத்திரங்களை உருவாக்கி, அதன் மூலம் ரசிகர்கள் பலரையும் சிரிக்க வைத்துள்ளார்.
நடிகை குஷ்புவை திருமணம் செய்துக் கொண்டுள்ள இவர், தற்போது அரண்மனை 4-ஆம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் சுந்தர் சி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “எனக்கு நடிகை சௌந்தர்யாவை மிகவும் பிடிக்கும்.. குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால், நான் என் காதலை சௌந்தர்யாவிடம் தான் கூறியிருப்பேன்.. மிகவும் நல்ல குணம் உடையவர் அவர்..” என்று தெரிவித்தார். நடிகை சௌந்தர்யா, விமானத்தில் பயணித்தபோது, விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login