Connect with us

Raj News Tamil

நாஞ்சில் சம்பத்திற்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

தமிழகம்

நாஞ்சில் சம்பத்திற்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் இயங்கி வந்த இவர், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்தார். ஆனால், டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில், அண்ணாவும் இல்லை திராவிடமும் இல்லை என்று கூறி, அக்கட்சியில் இருந்து விலகினார். தற்போது, திமுகவின் கூட்டங்களுக்கு சென்று, திராவிடம் குறித்து உரையாற்றி வருகிறார்.

இதற்கிடையே, சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top