Connect with us

Raj News Tamil

நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 128-ஆக உயர்வு!

உலகம்

நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 128-ஆக உயர்வு!

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.

இந்தியாவிலும் பல இடங்களில் உணரப்பட்டது. இதேபோன்று சீன எல்லைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பிரதேசங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

More in உலகம்

To Top