தமிழகம்
4 மாவட்டங்களில் அக்டோபர் மாத மின்கட்டணம்!
டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல், மழையால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளது.
புயல் காரணமாக அதிகனமழை ஏற்பட்டு பல்வேறு வீடுகளிலும் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவு.