உலகம்
ரூ.80-க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடி மதிப்புக்கு மாற்றிய பெண்!
இத்தாலி நாட்டில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடுகளை, ஒரு யுரோவிற்கு ஏலம் விடும் முயற்சியில், அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், ஒரு யுரோவிற்கு 750 சதுர அடி கொண்ட வீட்டை வாங்கினார்.
அதாவது, இந்திய மதிப்பில், 80 ரூபாய்க்கு, 750 சதுர அடி வீட்டை அவர் வாங்கியிருந்தார். மேலும், அந்த வீட்டின் பக்கத்தில் இருந்த, 3 ஆயிரம் சதுர அடி கொண்ட இன்னொரு வீட்டையும், 27 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருந்தார். இந்த இரண்டு வீட்டையும் ஒரே வீடாக இணைத்து, சீரமைத்தார்.
இதற்காக 2.35 கோடி ரூபாய் வரை செலவு செய்திருந்தார். இறுதியில், பெரிய படுக்கை அறை, 4 குளியல் அறை, டைனிங் அறை என்று அந்த வீட்டை மிகவும் பிரம்மாண்டமாக மாற்றிவிட்டார்.
இத்தனை அழகாக மாறிய அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு, ரூ.4.10 கோடியாக உள்ளது. வெறும் 80 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை வைத்து, ரூபாய் 4.10 கோடி சொத்துக்கு அதிபதியாகி உள்ள இந்த பெண்ணின் புத்திக் கூர்மையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login