தமிழகம்
ஆபாசமான புகைப்படங்கள்.. தொந்தரவு பண்ண பட்டிமன்ற பேச்சாளர்.. மாணவிகள் வைத்த செக்..
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கத்திரிப்புலம் கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்து வரும் அசோகன் என்பவர், பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அந்த பள்ளியில் பயின்று வரும் 18 மாணவிகள், தலைமை ஆசிரியரிடம் புகார் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், ஆசிரியர் அசோகன், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அசோகனை கைது செய்ய முற்பட்டனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவானதால், வலைவீசி தேடி வந்தனர்.
தற்போது சிக்கியுள்ள அவரை கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இதுவரை 31 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளதும், ஆபாசமான படங்களை மாணவிகளுக்கு அனுப்பி தொல்லை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
You must be logged in to post a commentLogin