Connect with us

Raj News Tamil

கரும்பு காட்டில் ஒதுங்கிய மைனர் காதல் ஜோடி! கண்டுபிடித்த இளைஞர்கள்! இறுதியில் நடந்த கொடுமை!

இந்தியா

கரும்பு காட்டில் ஒதுங்கிய மைனர் காதல் ஜோடி! கண்டுபிடித்த இளைஞர்கள்! இறுதியில் நடந்த கொடுமை!

கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில், ஒருசிலர் தனியாக சிக்கிக் கொள்ளும் காதல் ஜோடிகளை, தாக்குவதையும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவதையும், வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இத்தகைய சம்பவம் ஒன்று, உத்தரபிரதேச மாநிலத்தில், சமீபத்தில் நடந்துள்ளது. அதாவது, உத்தரபிரதேச மாநிலம் பீஜினோர் மாவட்டத்தில் உள்ள நஜீஜாபாத் பகுதியை சேர்ந்த சிறார் காதல் ஜோடி, அப்பகுதியில் இருந்த கரும்புக் காட்டில், தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அந்த காதல் ஜோடிகளை தாக்கியுள்ளனர். மேலும், தோப்புக்காரணம் போட வைத்த அவர்கள், அதனை வீடியோவாகவும் எடுத்து, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ, அப்பகுதி காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், காதல் ஜோடிகளை தாக்கிய நபர்களை கண்டறிந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

More in இந்தியா

To Top