Connect with us

Raj News Tamil

மாயமான ஆசிரியை நிலை என்ன? மாறி மாறி பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆசிரியர்!

தமிழகம்

மாயமான ஆசிரியை நிலை என்ன? மாறி மாறி பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆசிரியர்!

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், தனது மனைவியும், அரசுப் பள்ளி ஆசிரியையுமான தீபா என்பவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி அன்று, வீட்டில் இருந்து வெளியேறிய தீபா, அதோடு, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதேபோல், தீபாவுடன் பணியாற்றி வந்த வெங்கடேசன் என்ற ஆசிரியரும், காணாமல் போனதாக கூறப்பட்டது.

இதனால், இரண்டு பேரும், கள்ளக்காதல் காரணமாக, ஓடிப்போனதாக, உறவினர்கள் மத்தியில் கூறப்பட்டது. இதையடுத்து, இரண்டு தரப்பினரும், காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், வெங்கடேசன் பல்வேறு சிம் கார்டுகள் மூலமாக, பல்வேறு பெண்களுக்கு, செல்போனில், பேசி வந்துள்ளார்.

அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில், அந்த பெண்கள் அனைவரும், பாலியல் தொழிலாளிகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஏடிஎம்களில் இருந்து, அவர் பணம் எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால், பணத்தை எடுத்து, பல்வேறு பெண்களுடன், அவர் உல்லாசமாக இருந்து வருகிறார் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால், இதுவரை, ஆசிரியை தீபாவுக்கு என்ன ஆனது என்பது தொடர்பான தகவல், தெரியவில்லை. இதுகுறித்து , காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top