Connect with us

Raj News Tamil

மனைவி உள்பட இரண்டு பேரை வெட்டிவிட்டு தப்பியோடியவர் சாலை விபத்தில் மரணம்!

தமிழகம்

மனைவி உள்பட இரண்டு பேரை வெட்டிவிட்டு தப்பியோடியவர் சாலை விபத்தில் மரணம்!

தஞ்சாவூர் விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்யா, இவரது கணவர் சுந்தர் கணேஷ் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை சரமாரியாக வெட்டிவிட்டு காரை எடுத்து கொண்டு தப்பி விட்டார். பின்னர் யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டெப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இரண்டு பேரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்ற போது தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே டிப்பர் லாரி மீதி விபத்துக்குள்ளானதில் சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More in தமிழகம்

To Top