Connect with us

Raj News Tamil

வீட்டைக் காலி செய்ய சொன்ன உரிமையாளர் – அடித்தே கொன்ற நபர்..!

இந்தியா

வீட்டைக் காலி செய்ய சொன்ன உரிமையாளர் – அடித்தே கொன்ற நபர்..!

ஒடிசா மாநிலம், தேன்கல் மாவட்டத்தில் உள்ள காமக்யா நகருக்குட்பட்ட பௌசபால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹித் பிரதான். இவரது வீட்டில் நீரா பூட்டியா மற்றும் அவரது மனைவி வாடகைக்கு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளரான ரோஹித் பிரதான் அவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் வீட்டை காலி செய்யாமல் நீரா பூட்டியா இழுத்தடித்துள்ளார். வீட்டின் உரிமையாளரும் விடாப்பிடியாக தொடர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தவே, ஆத்திரமடைந்த நீரா பூட்டியா அருகிலிருந்த மரப்பலகையால் ரோஹித் பிரதானை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து ரோஹித் பிரதான் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து நீரா பூட்டியாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top