Connect with us

Raj News Tamil

தீயணைப்பு வீரரை கொலையாளியாக மாற்றிய ஆன்லைன் ரம்மி..!

தமிழகம்

தீயணைப்பு வீரரை கொலையாளியாக மாற்றிய ஆன்லைன் ரம்மி..!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் அருகே குப்பச்சிபாளையம், குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர்கள் சண்முகம் (70), நல்லம்மாள்(65) தம்பதியினர். கடந்த அக்டோபர் 12ம் தேதியன்று இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். விசாரணையில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஜனார்த்தனன் (33) தான் கொலையாளி என்பது தெரியவந்தது. இவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரியளவில் பணத்தை இழந்ததால், பலரிடமும் கடன் வாங்கியுள்ளார்.

இதனிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கடப்பாரையால் தாக்கி அவர்களது வீட்டில் கொள்ளையடித்தாக அவர் வாக்குமூலம் தெரிவித்தார். தீயணைப்பு வீரரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top