Connect with us

Raj News Tamil

அதிமுக-வை பார்க்கும்போது வெட்கக்கேடாக உள்ளது – வெளுத்து வாங்கிய பிரேமலதா

தமிழகம்

அதிமுக-வை பார்க்கும்போது வெட்கக்கேடாக உள்ளது – வெளுத்து வாங்கிய பிரேமலதா

பொங்கல் திருவிழா வந்தாலே, அரசியல் கட்சிகளின் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கோவை மாவட்டம் கணபதி பகுதியில், தேமுதிக சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் பிரேமலதா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய அவர், தேமுதிக நல்லவர் தொடங்கிய கட்சி என்றும், அது நேர்மையான கட்சி என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவை வெட்கக்கேடாக நினைக்கிறேன் என்று கூறிய அவர், தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும், பொங்கல் விழாவை அந்த கட்சி கொண்டாடவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து பேசிய அவர், தமிழக அரசியல் வரலாற்றில் அது ஒரு கருப்பு நாள் என்றும், கவர்னருக்கு தேமுதிக கண்டனம் தெரிவிக்கிறது என்றும் தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top