அரசியல்
பாஜகவை பார்த்து ஒரு போதும் பயப்படமாட்டேன்..வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம்.பி பதவி பறிக்கப்பட்டது. எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இணைந்து வயநாடு தொகுதிக்கு பேரணியாக சென்றார்.
வயநாடு தொகுதி மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது : பாஜகவை பார்த்து ஒருபோதும் பயப்பட மாட்டேன். எனக்கு எதிராக எது நடந்தாலும் நான் நானாக இருப்பேன். வயநாடு தொகுதி எம்.பியாக இருந்தாலும் இல்லாவிட்டலும் மக்களுக்காக போராடுவேன். நாட்டில் எத்தனையோ பேர் வீடு இல்லாமல் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன்” என்றார்.
You must be logged in to post a comment Login