சினிமா
ஜெயலலிதா பிறந்தநாளில் மனம் திறந்த ரஜினிகாந்த்..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழ்நாடு அரசு சார்பிலும், மலர் தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளில், அவர் நம்மோடு இல்லாததை வருத்தத்துடன் நினைவு படுத்திக்கொள்கிறேன்.
இவரைப்போன்று மற்றொரு பெண்மணியை பார்க்கவே முடியாது என்றும், அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை கொண்டவர் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய திரு.ரஜினிகாந்த் ஒரு கால கட்டத்தில் எனக்கும், அவருக்கும் மனஸ்தாபம் இருந்தது. ஆனால் இதையெல்லாம் பெரிதாக கருதாமல், என் மகள் திருமணத்தை முன் நின்று நடத்திக்கொடுத்தார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம் கொண்டவர் என்று நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.
You must be logged in to post a comment Login