சினிமா
“அவர்கள் எல்லோரும் ஒழுக்கம் இல்லாதவர்களா?” – ரஜினியின் சர்ச்சை பேச்சு!
சாருகேசி நாடகத்தை திரைப்படமாக தொடங்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நடத்துனராக இருந்தபோது எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை. சிகரெட், மது, அசைவ உணவு என்று பழக்கம் கொண்ட என்னை, அன்பால் ஒழுக்கமாக மாற்றியவர் லதா என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களை பார்க்கும்போது, எனக்கு பாவமாக உள்ளது என்றும் அந்த உரையில் அவர் தெரிவித்துள்ளார். சிகரெட், மது என்பது கெட்ட பழக்கம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அசைவ உணவு சாப்பிடுவது ஒழுக்கம் இல்லாத விஷயம் என எந்த அடிப்படையில் ரஜினி கூறியுள்ளார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login