Connect with us

Raj News Tamil

செருப்பு அணியாமல் ஏர்போர்ட் வந்த ராம்சரண்.. காரணம் அறிந்து பாராட்டும் ரசிகர்கள்..

சினிமா

செருப்பு அணியாமல் ஏர்போர்ட் வந்த ராம்சரண்.. காரணம் அறிந்து பாராட்டும் ரசிகர்கள்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில், வரும் மார்ச் 12-ஆம் தேதி அன்று ஆஸ்கர் விருது விழா நடக்க உள்ளது. இந்த விழாவில், நடிகர் ராம்சரன் கலந்துக் கொள்ள உள்ளார். இதன்காரணமாக, ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த அவர், கால்களில் காலணிகள் எதுவும் அணியாமல், வெறும் கால்களுடன் காணப்பட்டார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது. இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது, நடிகர் ராம்சரண் சபரிமலை ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறாராம்.

தீவிர ஐயப்பன் பக்தரான இவர், எந்த சூழ்நிலையிலும், விரதத்தை கடைப்பிடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இவ்வாறு செருப்பின்றி நடந்து வந்துள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள், ராம்சரணின் பக்தியை கண்டு வியந்து, பாராட்டி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top