Connect with us

Raj News Tamil

மீண்டும் இணையும் சமந்தா-நாக சைத்தன்யா? முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

சினிமா

மீண்டும் இணையும் சமந்தா-நாக சைத்தன்யா? முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

நடிகை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் ஒன்றாக இருந்தபோது, ஹாஷ் என்ற நாய்க்குட்டியை வளர்த்து வந்தனர்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அன்று, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்திற்கு பிறகு, அந்த நாய்க்குட்டியை சமந்தா தான் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் நாக சைத்தன்யா ஹாஷ் நாய்க்குட்டியுடன் ஒன்றாக இருப்பதை போன்ற புகைப்படம், இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சமந்தாவும் – நாக சைத்தன்யாவும் இணைய இருப்பதாக கூறி வந்தனர்.

ஆனால், அந்த வதந்திகளுக்கு நடிகை சமந்தா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவரது இடுப்பில் இருந்த நாக சைத்தன்யாவின் பெயரை கொண்ட டேட்டூ, நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தின்போது, லண்டன் நகரில், சிட்டாடல் வெப் தொடரின் பிரீமியர் ஷோ நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்துக் கொண்டபோது, அந்த டேட்டூ அவரது இடுப்பில் இருந்துள்ளது. இதன்மூலம், சமீபத்தில் தான் அந்த டேட்டூவை சமந்தா நீக்கியுள்ளார் என்பதும் தெளிவாகியுள்ளது.

More in சினிமா

To Top