Connect with us

Raj News Tamil

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : கேஎஸ் அழகிரி பேட்டி

அரசியல்

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை : கேஎஸ் அழகிரி பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More in அரசியல்

To Top