Connect with us

Raj News Tamil

வேறொரு பெண்ணுடன் பழக்கம்.. 8 வருடங்கள் கீர்த்தியுடன் பிரிந்து இருந்த சாந்தனு.. அவங்களே சொல்லிட்டாங்க.. அதிர்ச்சி தகவல்..

சினிமா

வேறொரு பெண்ணுடன் பழக்கம்.. 8 வருடங்கள் கீர்த்தியுடன் பிரிந்து இருந்த சாந்தனு.. அவங்களே சொல்லிட்டாங்க.. அதிர்ச்சி தகவல்..

வாரிசு நடிகர்களின் வரிசையில் கடைசியாக நடிக்க வந்த ஹீரோ என்றால் அது சாந்தனு தான். ஆனால், சரியான கதை தேர்வு இல்லாததாலும், வாய்ப்புகள் சரியாக அமையாததாலும், முன்னணி நடிகராக முன்னேற முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி கீர்த்தியுடன், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது, நானும், கீர்த்தியும், 8 வருடங்களுக்கு பிரிந்து இருந்தோம் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினார்.

அதாவது, இவர்கள் இருவரும் காதலித்து வந்த சமயத்தில், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு, பேசாமல் இருப்பார்களாம். இவ்வாறு இருக்கும்போது, ஒரு நாள் சிறிய பிரச்சனைக்கு சண்டை போட்டுக் கொண்டு, பேசாமல் இருந்தார்களாம். அந்த இடைவெளியின்போது, வேறொரு பெண்ணுடன், சாந்தனு காபி ஷாப்பிற்கு சென்றாராம்.

இதனை பார்த்த கீர்த்தியின் தோழி, அவரிடம் கூறிவிட்டாராம். இதனால் கடும் கோபம் அடைந்த கீர்த்தி, சாந்தனுவை பிரேக் அப் செய்துவிட்டாராம்.

இவ்வாறு 8 வருடங்கள் கடந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது, மீண்டும் இருவரும் பேசி, சமரசம் ஆகி, காதலிக்கத் தொடங்கினார்களாம். தற்போது, திருமணம் செய்துக் கொண்டு, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top