Connect with us

Raj News Tamil

“எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க” – நடிகர் சிவக்குமார்

சினிமா

“எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க” – நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர் ஒருவர், சிவக்குமாருக்கு சால்வையை போர்த்த முயன்றார்.

ஆனால், அதற்கு கோபம் அடைந்த அவர், அந்த சால்வையை பிடித்து, தூக்கி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வந்த நிலையில், தற்போது சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, “சால்வை போர்த்த வந்தவர் என்னுடைய நண்பர் தான். சால்வை போர்த்துவது எனக்கு பிடிக்காது என தெரிந்தும் அவர் கொண்டு வந்ததால், கோபம் அடைந்துவிட்டேன்.

ஆனால், நான் பொது இடத்தில் சால்வையை தூக்கி வீசியது தவறு தான். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சிவக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top