Connect with us

Raj News Tamil

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைப்பு

தமிழகம்

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைப்பு

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜனதா மாவட்ட நிர்வாகி ஆவார். இவரது சகோதரி தேவி கடந்த 21-ந் தேதி இரவு ஆண்டாள் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தூண்டுதலின்பேரில், அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் வீட்டில் நுழைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில் தேவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி, பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஆட்கள் அழைத்து செல்வது தொடர்பாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், கார் டிரைவர் ஸ்ரீதரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அமர்பிரசாத் ரெட்டி கடலூரில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் அவரை பிடிக்க கடலூருக்கு விரைந்துள்ளனர்.

More in தமிழகம்

To Top