Connect with us

Raj News Tamil

இலங்கையை அடித்து நொறுக்கி; முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது இந்தியா!

விளையாட்டு

இலங்கையை அடித்து நொறுக்கி; முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது இந்தியா!

இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தன.

சுப்மன் கில் 92 ரன்களும், கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்துனர். இலங்கை அணி தரப்பில் மதுஷன்கா 5 விக்கெட்டுகளும், சமீரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணியை தொடக்கத்திலேயே சிராஜ் சரித்தார். அவரது குருணாரத்னே (0), குசால் மெண்டிஸ் (1), சமரவிக்ரமா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் இலங்கை அணி மீண்டு வருவதற்குள் முகமது ஷமி தனது புயல்வேக பந்துவீச்சால் நிலைகுலைய செய்தார். இதனால் இலங்கை அணி 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு சுருண்டது. ஷமி 5 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி இரண்டாவது முறையாக 300 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

உலகக் கோப்பையில் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

More in விளையாட்டு

To Top