Connect with us

Raj News Tamil

ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் கடிதம் எழுதியது வேஸ்ட் – திருமாவளவன் பேட்டி

அரசியல்

ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் கடிதம் எழுதியது வேஸ்ட் – திருமாவளவன் பேட்டி

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவரிடம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “குடியரசுத் தலைவருக்கு முதல்வரின் இந்தக் கடிதம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனாலும் கூட, ஆளுநரின் போக்குகளை மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் தெரிவிக்க வேண்டியது முதல்வரின் கடமை என கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவரும் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், இந்தக் கடிதம் தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

More in அரசியல்

To Top