Connect with us

Raj News Tamil

சிகிச்சை அளிக்க மறுத்து ரவுடியை அடித்துக்கொன்ற டாக்டர்!

இந்தியா

சிகிச்சை அளிக்க மறுத்து ரவுடியை அடித்துக்கொன்ற டாக்டர்!

பீகார் மாநிலத்தில் சந்தன்குமார் என்ற ரவுடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் அஜித் பஸ்வான் என்பவர் ரவுடி சந்தன்குமாருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். இதனால், டாக்டருக்கும், ரவுடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மோதலில் ஈடுபட்டனர்.

இதை கண்ட மருத்துவமனை ஊழியர்களும், டாக்டருடன் சேர்ந்து ரவுடி சந்தன்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுத்த காயமடைந்த ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி சந்தன்குமாரின் கூட்டாளிகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், மருத்துவமனை மற்றும் அருகில் இருந்த குடிசைக்கும் தீ வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் உயிரிழந்த ரவுடி சந்தன்குமாரின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் டாக்டர் அஜித் மற்றும் மருத்துவமனை ஊழியரை தீவீரமாக தேடி வருகின்றனர்.

More in இந்தியா

To Top