தமிழகம்
கணவருன் பைக்கில் சென்ற பேராசிரியை.. திடீரென நடந்த அசம்பாவிதம்.. சோகத்தில் முடிந்த பயணம்..
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பைத்தம்பாறை பகுதியை சேர்ந்தவர் பாமா ப்ரீத்தா. 45 வயதாகும் இவர், தனியார் கல்லூரி ஒன்றில், பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாமா தனது கணவருடன், பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பேராசிரியை பாமா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த அவரது கணவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login