Connect with us

Raj News Tamil

திருச்சி அதிர்ச்சி… பில் கலெக்டர் தற்கொலை!

தமிழகம்

திருச்சி அதிர்ச்சி… பில் கலெக்டர் தற்கொலை!

திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (34) என்பவர் திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணேஷ் பல இடங்களில் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த சூழலில் மதிய வேளையில் விட்டிற்கு வந்த அவர், திடீரென வாந்தி எடுத்துள்ளார். பதறிபோன அவரது மனைவி இதுகுறித்து கேட்டபோது எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top