Connect with us
Raj News Tamil

Raj News Tamil

செல்வராகவன் மெசேஜ்-க்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு ரிப்ளை செய்த த்ரிஷா! ஏன் தெரியுமா?

சினிமா

செல்வராகவன் மெசேஜ்-க்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு ரிப்ளை செய்த த்ரிஷா! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் செல்வராகவன்.

இவர், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், த்ரிஷா ஆகியோரை வைத்து, 2007-ஆம் ஆண்டு அன்று, “ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே” என்ற தெலுங்கு படம் ஒன்றை எடுத்திருந்தார்.

பெரும் வெற்றியை பெற்ற அந்த திரைப்படம், யாரடி நீ மோகினி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவ்வாறு

இருக்க, கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று, இயக்குநர் செல்வராகவன், ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். வெங்கடேஷ், த்ரிஷா ஆகியோருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். இந்த படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு, 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார். அதாவது, “நான் ரெடி, செல்வராகவன்” என பதிலளித்துள்ளார்.

More in சினிமா

To Top