Connect with us

Raj News Tamil

தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை: குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது!

தமிழகம்

தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை: குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று இரவு வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரயில் சேவைகள், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து தமிழக அரசு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top