Connect with us

Raj News Tamil

“என்ன கருமம்டா இது” – மெட்ரோ ரயிலில் ஆபாசமாக நடந்துக் கொண்ட காதல் ஜோடி!

இந்தியா

“என்ன கருமம்டா இது” – மெட்ரோ ரயிலில் ஆபாசமாக நடந்துக் கொண்ட காதல் ஜோடி!

பொது இடங்களில் ஆபாசமாக நடந்துக் கொள்ளுதல், சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது.

இருப்பினும், சில காதல் ஜோடியினர், பொது இடங்களில் ஆபாசமான செயல்களை செய்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு இருக்க, புதிய வீடியோ ஒன்று, இணையதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. அதில், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் ஒருவர் குளிர்பானம் ஒன்றை குடிக்கிறார்.

பின்னர், அந்த குளிர்பானத்தின் ஒரு பகுதியை, தன்னுடைய காதலரின் வாயில் உமிழ்கிறார். ரெமாண்டிக்கான செயல் என்று நினைத்துக் கொண்டு, அந்த காதல் ஜோடி செய்துள்ள ஆபாசமான செயல், நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த வீடியோ குறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும், அவர்கள் புகார் அளித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு, இந்த வீடியோ சென்றதையடுத்து, அந்த காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற ஆபாச செயல்களை, மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது யாராவாது செய்வதை நீங்கள் பார்த்தால், நிச்சயம் நீங்கள் புகாரளிக்கலாம் என்றும், நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top