Connect with us

Raj News Tamil

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் : பாஜக பிரமுகர் கைது

இந்தியா

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் : பாஜக பிரமுகர் கைது

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஓட்டல் நடத்தி வருபவர் சப்யசாச்சி கோஷ். பாஜக பிரமுகரான இவர் இவரது ஓட்டலில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து போலீசார் ஓட்டலில் நுழைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளரான பாஜக பிரமுகர் சப்யசாச்சி கோஷ் உள்பட 10க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். இதில் 18 வயது நிரம்பாத சிறுமிகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛மேற்கு வங்க மாநில பாஜக பிரமுகர் சப்யசாச்சி கோஷ் ஹவுராவில் 18 வயது நிரம்பாத சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்தி உள்ளார். 11 பேரை கைது செய்துள்ள போலீஸ், 6 பேரை மீட்டுள்ளது. இதுதான் பாஜக, அவர்கள் பெண்களை பாதுகாப்பது இல்லை. அவர்கள் விபசார புரோக்கர்களை பாதுகாக்கிறார்கள்’’ என கூறியுள்ளது. இந்த விவகாரம் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More in இந்தியா

To Top