தமிழகம்
எப்படியாவது என் மனைவியை காப்பாற்றுங்கள்…ராணுவ வீரர் கண்ணீர் பேட்டி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாரகன். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் குன்னத்துர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடையை மேல் வாடகைக்கு எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.
இதனிடையே கடையை காலி செய்ய ராமு வற்புறுத்தியதாகவும், கடையில் இருந்த பொருட்களை வீசி எரிந்து கடையை காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கீர்த்தியின் சகோதரர் ஜீவா என்பவர் ராமுவை கத்தியால் தாக்கியதாகவும், இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் மனைவி கீர்த்தியும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தன் மனைவி கீர்த்தி மீது எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்முவில் இருந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு வீடியோ மூலம் புகார் தெரிவித்தார்.
என் மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்திருக்கிறார்கள். எப்படியாவது என் மனைவியை காப்பாற்றுங்கள் என அவர் வீடியோவில் பேசியுள்ளார்.
எப்படியாவது என் மனைவியை காப்பாற்றுங்கள்…ராணுவ வீரர் கண்ணீர் பேட்டி..! #RajNewsTamil #Tiruvannamalai #ArmyMan #DGP @tnpoliceoffl @mkstalin pic.twitter.com/P6Gfczq5ib
— Raj News Tamil (@rajnewstamil) June 11, 2023
You must be logged in to post a comment Login