Connect with us

Raj News Tamil

தாழ்பாள் போட மறந்துட்டேன்.. வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்.. அத்துமீறிய நபரின் ஆணுறுப்பை அறுத்த இளம்பெண்..

இந்தியா

தாழ்பாள் போட மறந்துட்டேன்.. வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்.. அத்துமீறிய நபரின் ஆணுறுப்பை அறுத்த இளம்பெண்..

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் தனது கணவருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கணவர் வேலைக்கு சென்றுள்ளார். இரவு 10 மணி ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால், அந்த பெண் தூங்குவதற்கு படுக்கையறைக்கு போயுள்ளார்.

ஆனால், ஞாபக மறதி காரணமாக, வீட்டின் தாழ்பாளை மூடவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது, வீடு திறந்து இருப்பதை கண்ட 27 வயது இளைஞர் ஒருவர், உள்ளே நுழைந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் இருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்த பெண், இறுதியில் கையில் கிடைத்த ஷேவிங் பிளேடை வைத்து, பிறப்புறுப்பை அறுத்துள்ளார். இதனால், அந்த இளைஞர் அலறித் துடித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் அங்கிருந்து தப்பியோடி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

ஆனால், அதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இருப்பினும், காவல்துறையில் பெண் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அத்துமீறி நடந்துக் கொண்டவரை கண்டறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top