Connect with us

“அரசியல் பண்ணாதீங்க” – விஷாலுக்கு பதிலடி தந்த மேயர் பிரியா ராஜன்!

தமிழகம்

“அரசியல் பண்ணாதீங்க” – விஷாலுக்கு பதிலடி தந்த மேயர் பிரியா ராஜன்!

மிக்ஜாங் புயல் மையம் கொண்டதையடுத்து, தமிழகத்தின் வடமாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுார், செங்கல்பட்டில், கனமழை பெய்தது.

என்னதான் பல்வேறு முன்னேற்பாடுகள் அரசு சார்பில் செய்திருந்தபோதிலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில், வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சென்னை மாவட்டமே இருளில் மூழ்கியிருந்தது.

தற்போது, புயல் கரையை கடந்த நிலையில், ஒவ்வொரு பாதிப்புகளும், சரிசெய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷால், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மக்கள் அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வாருங்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு, சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, “படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம்.

வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள்.

அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால், தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்.” என்று மேயர் பிரியா ராஜன் பதிவிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top