Connect with us

Raj News Tamil

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி.. பின்தொடர்ந்த 5 இளைஞர்கள்.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..

இந்தியா

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி.. பின்தொடர்ந்த 5 இளைஞர்கள்.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் அருகே உள்ள ராம்கோட் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர், சம்பவத்தன்று, இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதனை கவனித்த 5 இளைஞர்கள், அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, அந்த சிறுமியை கடத்தி சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த சிறுமி, தனது பெற்றோர்களிடம் நடந்த கொடுமையை கூறி, கதறி அழுதுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை, தீவிரமாக தேடி வருகின்றனர். 15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 5 பேரில், 3 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top