Connect with us

Raj News Tamil

“அடிச்சிக்கிட்டே இருப்பாரு.. அதான் கொன்னுட்டோம்” – சித்தப்பாவை கொன்ற மகன்கள்!

தமிழகம்

“அடிச்சிக்கிட்டே இருப்பாரு.. அதான் கொன்னுட்டோம்” – சித்தப்பாவை கொன்ற மகன்கள்!

குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சுகாஷ்-சுனில். சகோதரர்களான இவர்கள் இருவரும், மெக்கானிக் வேலை செய்து வருகின்றனர். சுகாஷையும், சுனிலையும், அவர்களுடைய சித்தப்பா சுதிஷ் அடிக்கடி அடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருவரும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், அதிஷின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்த சுகாஷ்-ம், சுனிலும், அதிஷின் தந்தையிடம் தகராறு செய்துள்ளனர். இதனை அறிந்த அவர், தனது அண்ணன் மகன்களை அழைத்து, தகராறு குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில், தனது சித்தப்பாவை, சுகாஷ்-ம், சுனிலும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அதற்குள், சுகாஷ்-ம், சுனிலும், அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். குடும்ப தகராறில், சித்தப்பாவை மகன்களே வெட்டிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top