Connect with us

Raj News Tamil

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கு பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர் . இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாத குழுக்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top