Connect with us
Raj News Tamil

Raj News Tamil

56 வயது ஆசிரியர் செய்த சேட்டை.. கண்ணீர் வடித்த 24 மாணவிகள்.. அரசு பள்ளியில் நடந்த கொடுமை..

தமிழகம்

56 வயது ஆசிரியர் செய்த சேட்டை.. கண்ணீர் வடித்த 24 மாணவிகள்.. அரசு பள்ளியில் நடந்த கொடுமை..

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, அப்பள்ளியின் ஆசிரியர் லட்சுமணன் பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இவரது நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளாத மாணவிகள், தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள், காவல்துறையில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், லட்சுமணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் வயதில் இருக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியரே பாலியல் கொடுமை அளித்துள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top