Trending
தலையில் கரும்பு.. 17 கி.மீ சைக்கிள் பயணம்.. 91 வயதிலும் மகளுக்கு பொங்கல் சீர் தரும் தந்தை..
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. 91 வயதான இவர், விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகளுக்கு, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
திருமணமாகி 11 வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த அந்த தம்பதிக்கு, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, இரட்டை குழந்தை பிறந்து, அனைவரையும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.
அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தனது மகளுக்கு, பொங்கல் சீர் எடுத்துச் செல்வதை செல்லத்துரை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல், இந்த ஆண்டும், சைக்கிளில் 17 கி.மீ பயணித்து, தனது மகளுக்கு பொங்கல் சீரை வழங்கியுள்ளார். 91 வயதிலும் மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்கும் தந்தையை பார்த்து, நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
You must be logged in to post a comment Login