Connect with us

Raj News Tamil

பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி மீது துப்பாக்கி சூடு.. 10 பேர் காயம்

இந்தியா

பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி மீது துப்பாக்கி சூடு.. 10 பேர் காயம்

உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இந்நிலையில், ஜிதேந்திர திவாரி என்பவர் அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அந்நபருக்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதையடுத்து திவாரி மற்றும் அவருடைய தந்தை என இருவரும் மாணவியின் வீட்டுக்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

இதில் காயமடைந்த அவர்கள் சுகாதார நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் நிலைமை சீரடைந்து உள்ளது.

இதுபற்றி மஹோபா மாவட்ட எஸ்.பி. அபர்ணா குப்தா கூறும்போது, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

More in இந்தியா

To Top