Connect with us

Raj News Tamil

சாலையை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுனர்: கார் மோதி பலி!

தமிழகம்

சாலையை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுனர்: கார் மோதி பலி!

சென்னை பல்லாவரம் அடுத்த கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (59) தாம்பரம் பணிமனையில் தடம் எண் 500 தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக தாம்பரம் பணிமனை அருகே சாலையை கடக்க முயன்ற போது பெருங்களத்தூரில் இருந்து பல்லாவரம் நோக்கி வேகமாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார் இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுனர் ஆனந்தனை தனது காரிலையே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆனந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கார் ஓடுனரிடம் நடத்திய விசாரனையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (30) என்பதும் சென்னையில் வாடகை கார் ஓட்டி வருவதும் தெரியவந்துள்ளது.

More in தமிழகம்

To Top