Connect with us

Raj News Tamil

கணவரின் செல்போனை பார்த்த மனைவி.. காத்திருந்த அதிர்ச்சி.. சிக்கிய பல வீடியோக்கள்..

தமிழகம்

கணவரின் செல்போனை பார்த்த மனைவி.. காத்திருந்த அதிர்ச்சி.. சிக்கிய பல வீடியோக்கள்..

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விமல். இவருக்கும், இவரது ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், கடந்த 2021-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த இளம்பெண், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “நான் கருப்பாக இருப்பதால், என் கணவர் அடித்து கொடுமைப்படுத்துகிறார். உன்னுடன் வாழ வேண்டும் என்றால், 50 சவரன் நகைகளை கொடுக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்கிறார். இதுமட்டுமின்றி, மது அருந்திவிட்டு தினந்தோறும் என்னை அடிக்கும் அவர், தாகத வார்த்தைகளால் கடுமையாக திட்டுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என் கணவரின் செல்போனை பார்த்தபோது, அதில் பல்வேறு பெண்களுடன் அவர் தகாத உறவு வைத்துக் கொண்ட வீடியோ உள்ளது. அந்த வீடியோவை காட்டி, தான் உறவு வைத்திருந்த பெண்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், விமலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரின் தாய், தந்தையர், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்டவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top