Trending
விமானத்தில் திடீரென தீப்பற்றிய பவர் பேங்க்..! 2 பேர் காயம்
தைவான் நாட்டில் விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல் பவர் பேங்க் ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதனால், மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பவர் பேங்க் வைத்திருந்தவர் மற்றும் அவரது அருகே அமர்ந்திருந்த 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
You must be logged in to post a comment Login