Connect with us

Raj News Tamil

மம்தா பானர்ஜி வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற மர்ம நபர்!

இந்தியா

மம்தா பானர்ஜி வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற மர்ம நபர்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் உள்ள ஹரீஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது. நேற்று காலை முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டில் இருக்கும்போது ஹரீஷ் சாட்டர்ஜி தெருவில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் நுழைய ஒரு நபர் முயன்றார். அவரது காரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பிஎஸ்எப் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன.

அதிர்ச்சி அடைந்த போலீஸார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்டார்.

இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் கூறும்போது, “அந்த நபரிடம் இருந்து பல்வேறு போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அறிய முயன்று வருகிறோம். அந்த நபர் முதலில், தான் அனந்தபூரை சேர்ந்தவர் என்றார். பிறகு பாஸ்சிம் மெதினிபூர் என்கிறார். இதில் உண்மை என்ன என்பதை நாங்கள் சரிபார்த்து வருகிறோம்” என்றார்.

மற்றொரு அதிகாரி கூறும்போது, “அந்த நபர் தற்போது போலீஸார் காவலில் இருக்கிறார். காளிகாட் காவல் நிலையத்தில் காவல்துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

More in இந்தியா

To Top