இந்தியா
ஒரே ஒரு மாணவனுக்காக செயல்படும் பள்ளி..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கணேஷ்புர் என்ற கிராமத்தில் ஒரே ஒரு மாணவனுக்காக பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
150 பேர் மட்டுமே வாழும் இந்த சிறிய கிராமத்தில் ஒரே ஒரு மாணவன் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கு சென்று வருகிறான்.
அந்த பள்ளியில் பணிபுரியும் கிஷோர் என்கிற ஆசிரியர் அந்த மாணவனுக்கு அனைத்து பாடங்களையும் கற்றுத் தருகிறார். மேலும் அரசுப்பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு அந்த மாணவனுக்கு வழங்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login