இந்தியா
நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை…போலீஸ் விசாரணை
புதுச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர் 12 ஆம் வகுப்பு கடந்த ஆண்டு முடித்த நிலையில் நீட் தேர்வு எழுதினார். ஆனால் குறைவான மதிப்பெண் பெற்றதால் அவரால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் இந்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்விற்காக தன்னை தயார் படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் மாணவன் ஹேமச்சந்திரன் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், காலை அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் மாணவன் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும், தேர்வு பயம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login