தமிழகம்
“உங்க வீட்டு பணம் கிடையாது” – கிழித்து தொங்கவிட்ட நடிகை கஸ்தூரி!
அரசின் இலவச பேருந்து திட்டத்தை, ஓசி என்று கூறி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்கினார். இது பெரும் பேசுபொருளான நிலையில், பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,
தஞ்சையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில், நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கஸ்தூரி, “இலவச பேருந்து திட்டத்தை தமிழக அரசு அறிவித்தபோது, அதனை முதல் ஆளாக நான் வரவேற்றேன். அந்த திட்டம் பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் திட்டமாக இருந்தது.
இப்படியான ஒரு திட்டத்தை, அமைச்சர் பொன்முடி கொச்சையாக பேசியிருக்கக் கூடாது. அரசாங்க திட்டங்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்தில் இருந்து தான் செயல்படுத்தப்படுகிறது. இது அமைச்சரின் சொந்தப் பணம் அல்ல. இது மிகப்பெரிய தவறு. இந்த பேச்சை நியாயப்படுத்தவே முடியாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
You must be logged in to post a comment Login