Connect with us

Raj News Tamil

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அண்ணாமலை – கேஎஸ் அழகிரி விமர்சனம்

அரசியல்

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அண்ணாமலை – கேஎஸ் அழகிரி விமர்சனம்

பெங்களூரில் நடக்கும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டால் அவரை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார் . இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் சொன்னதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தனது கடுமையான மறுப்பை தெரிவித்திருக்கிறார். எந்த காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என்று அவர் உறுதியாக சொல்கிறார். ஆனால் அண்ணாமலை தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் அண்ணாமலை கடந்த தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட அண்ணாமலை ஸ்டாலினை உள்ளே விடமாட்டோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல இவர் யார் ? என கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top