தமிழகம்
ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் அண்ணாமலை
ஈரோடு இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனும் அதிமுக சார்பில் தென்னரசும் போட்டியிடுகின்றனர். மேலும் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவரும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு ஆதரவாக வருகிற 19 மற்றும் 20ஆம் தேதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login