சினிமா
அனுஷ்கா சர்மா எடுத்த அதிரடி முடிவு! கோலி தான் காரணமா?
பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலியை காதலித்து வந்த இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வந்த அனுஷ்கா சர்மா, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், தனது சினிமா பயணம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அதன்படி, “நான் என்னுடைய சினிமா பயணத்திற்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும், சரிசமமான நேரத்தை செலவிட விரும்புகிறேன். அதனால், இனிமேல் வருடத்திற்கு ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர், தற்போது இப்படியொரு முடிவு எடுத்துள்ளதால்,தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
You must be logged in to post a comment Login