Connect with us

Raj News Tamil

காதலனை தனிமையில் சந்திக்க கிராமத்தையே இருளாக்கிய காதலி!

இந்தியா

காதலனை தனிமையில் சந்திக்க கிராமத்தையே இருளாக்கிய காதலி!

காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் காதலர்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான சம்பவம் ஒன்று, தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது.

அதாவது, பீகார் மாநிலம் பெத்தியா பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற இளைஞரை, காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு இடம் ஏதும் கிடைக்காததால், இரவு நேரங்களில், தங்களது கிராமத்தின் மின் இணைப்பை, ப்ரீத்தி துண்டித்துள்ளார். அதன்பிறகு, அங்கு நிலவும் இருளை பயன்படுத்தி, இருவரும் சந்தித்து, காதலை வளர்த்துள்ளனர்.

தொடர்ந்து இவ்வாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் மின்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால், அனைத்தும் சரியாக தான் உள்ளது என்று கூறி, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இறுதியில், ப்ரீத்தி தான் இதற்கு காரணம் என்பதை அறிந்த இவர்கள், மின் இணைப்பு எப்போது துண்டிக்கப்படும் என்று காத்திருந்தனர்.

இந்த முறை துண்டிக்கப்பட்டபோது, காதலர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன்பிறகு, அவர்களிடம் விசாரணை நடத்திய கிராம மக்கள், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

More in இந்தியா

To Top